தல் செய்தற்காக காதலன் , காதலிகள் பஞ்சாயத்து மூலம் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் .அரியானாவில் நடந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: மோனிகா ( 18 ), ரிங்கு (19), மனம்ஒத்து காதல் செய்திருக்கின்றனர். இதனைக்கேள்விப்பட்ட மோனிகாவின் தந்தை, சகோதரன், மாமன், சேர்ந்து காதலன், காதலியை கொடுமைப்படுத்தினர். பின்னர் இருவரையும் அடித்தே கொன்றிருக்கின்றனர். காதலனை தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள். இது இந்த கிராம மக்கள் சிலர் பார்க்கும் அளவிற்கு அவர்கள் முன்னிலையில் கொன்றிருக்கின்றனர். யாராவது காதலித்தால் இவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் என கிராமத்தினரை எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காதலன் ரிங்குவின் மாமனார் கிருஷ்ண குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் பிரேம்சிங் தெரிவித்தார். இவர் மேலும் கூறுகையில்; இருவரது உடல்களிலும் உள்ள காயத்தின் அடிப்படையில் கொடுமைப்படுத்தப்பட்டு